ரூ.8 கோடி போதை பொருள் பறிமுதல்: வாலிபர் கைது

புதுக்கோட்டை: நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்தவர் அலெக்ஸ் (32). இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவரை, கடந்த ஒரு வாரமாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 95 கிராம் எடையுள்ள மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போதை பொருள் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது. இந்த போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

The post ரூ.8 கோடி போதை பொருள் பறிமுதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: