சீமான் பேசிய பேச்சுகளுக்கு 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: சீமான் பேசிய பேச்சுகளுக்கு 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சீமான் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் டிஜிபியிடம் புகார் தெரிவித்தார். புகார் மீது நடவடிக்கை கோரிய வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் வழக்கு தொடர்ந்தார்.

The post சீமான் பேசிய பேச்சுகளுக்கு 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: