தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கேரள மாநிலம் மூணாறில் அவரை கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து மகிளா கோர்ட் நீதிபதி வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர். வரும் 25ம் தேதி வரை ஜான் ஜெபராஜ் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
The post போக்சோ வழக்கில் கைதான மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் appeared first on Dinakaran.