போக்சோ வழக்கில் கைதான மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

கோவை: தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37), கிறிஸ்தவ மதபோதகர். இவர், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். 3 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, பெங்களூர், கேரளா ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கேரள மாநிலம் மூணாறில் அவரை கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து மகிளா கோர்ட் நீதிபதி வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர். வரும் 25ம் தேதி வரை ஜான் ஜெபராஜ் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

The post போக்சோ வழக்கில் கைதான மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: