கால் மற்றும் வாய் நோய் என்பது தொற்றும் வைரஸ் நோய். இது, மாடுகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் உள்ளிட்ட பிளவுபட்ட குளம்புகள் கொண்ட விலங்குகளை பாதிக்கிறது. இந்த நோய் நேரடி தொடர்பு, அசுத்தமான மேற்பரப்புகள் அல்லது காற்று வழியாகவும் வேகமாகப் பரவும். நோயை தடுக்க பண்ணைகளில் மருந்து தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஹங்கேரி மேற்கொண்டு வருகிறது.ஆஸ்திரியாவுடனான எல்லையை ஹங்கேரி மூடியுள்ளது. எந்த பாதிப்பும் இல்லாத போதும் ஆஸ்திரியா நாடு ஹங்கேரி,ஸ்லோவேக்கியாவுடனான எல்லைகளை மூடியுள்ளது. நோய் பாதிப்புக்கு அஞ்சி செக் குடியரசும் தனது எல்லைகளை மூடியுள்ளது.
The post மத்திய ஐரோப்பாவில் பரவும் புதிய வைரஸ்: ஏராளமான கால்நடைகள் பலி; பல நாடுகளின் எல்லைகள் மூடல் appeared first on Dinakaran.