பாகிஸ்தானில் பல ஆண்டுகள் தங்கியிருந்த 11,000 ஆப்கன் அகதிகள் நாடு கடத்தல்

இஸ்லாமா பாத்: பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த 11,230 ஆப்கானிய அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலால் சவுத்ரி தெரிவித்தார். பாகிஸ்தான் வெளியுறவு துறை இணை அமைச்சர் தலால் சவுத்ரி நேற்று கூறுகையில்,‘‘ ஆப்கானிய குடியுரிமை அட்டை வைத்திருக்கும் நபர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டை விட்டு தாமாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டது.

இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஆப்கானிய அகதிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த 1ம் தேதியில் இருந்து இதுவரை 11,230 அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள ஆப்கான் அகதிகளை வெளியேற்றுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை கடந்த 2023ல் தொடங்கப்பட்டது. இதுவரை 8,57,157 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் மட்டுமே வெளியேற்றப்படுகிறார்கள். நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் அனைத்திலும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது’’ என்றார்.

 

The post பாகிஸ்தானில் பல ஆண்டுகள் தங்கியிருந்த 11,000 ஆப்கன் அகதிகள் நாடு கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: