திருச்சி, ஏப்.10: புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். திருச்சி கல்லுக்குழி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பெயரில் நேற்றுமுன்தினம் இரவு கல்லுக்குழி-இலுப்பூர் சாலை பகுதியிலுள்ள கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 14 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து கல்லுக்குழி ஞானாதிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஞானராஜ் (55) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 14 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post புகையிலை பொருள் பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.