திருவண்ணாமலை பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 12ம்தேதி அதிகாலை 3.21 மணிக்கு தொடங்கி, 13ம்தேதி அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 12ம்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யவும், நீண்டநேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கவும், சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே வழக்கம்போல சிறப்பு ரயில்கள் இயக்கவும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Related Stories: