அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அன்பழகன் தலைமறைவாகிவிட்டார். அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், அன்பழகனை நேற்று மகளிர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து கல்லூரி துணை முதல்வர் அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.
The post பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கல்லூரி துணை முதல்வர் கைது appeared first on Dinakaran.