சென்னை: தாம்பரம் அருகே மது போதையில் அதிவேகமாக வந்த மூவர் பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற்போது தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் (31) உயிரிழந்தார். உடன் சென்ற சுரேந்தர், சஞ்சய் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நேற்று நடந்த இச்சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.