கரூர், ஏப். 4: கரூர் மாவட்டம் நெரூர் போன்ற காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், வாங்கல், சோமூர், ரெங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம், திருமுக்கூடலு£ர் ஆகிய பகுதிகள் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளாக உள்ளன. மேலும், கரூர் நகரின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆறும் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து கொண்டு திருச்சி நோக்கி ஒரு மித்த காவிரியாக பயணிக்கிறது.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் பல ஆண்டுகளாக கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த கோரை பயிர் சாகுபடியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காவிரி ஆற்றங்கரையை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் கோரை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு முறை பயிரிடப்படும் கோரை ஆறு மாதங்களுக்கு பிறகு விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆறு மாத விளைச்சலுக்கு பிறகு அதனை அறுத்து, கோரைகளை கைப்பிடியாக பிடித்து ஒரு கட்டு என்ற அடிப்படையில் வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, ஆறு கட்டுகளை ஒன்றாக இணைத்து பெரிய கட்டாக மாற்றி அதனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாய் தயாரிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கோரை பயிர் உள்ளது. இதன் காரணமாக இதனை விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கிச் செல்லும் வகையில் வியாபாரிகள் இந்த பகுதியில முகாமிட்டு மொத்தமாக விவசாயிகளிடம் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், தற்போதைய நிலையில் பிற மாநிலங்களில் கோரைப் பயிர், சென்டரிங் தொழிலிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டு கோரைப் பயிர் ரூ. 1200 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இதனை விளைவிக்க விவசாயிகள் அதிகளவு உழைப்பையும், செலவையும் விவசாயிகள் செலவிட்டு பின்னர் அறுவடை செய்கின்றனர். ஆனால், இவர்களின் உழைப்புக்கு ஏற்ற வகையில் விலை கிடைப்பதில்லை என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக உள்ளது. நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த பாய் தயாரிப்புக்கு முக்கிய மூலப் பொருளாக விளங்கி வரும் இந்த பாய் தொழிலுக்கு தேவையான கோரை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலன் கருதி, இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசுகள் செய்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரை பயிர் சாகுபடியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
The post கரூர் மாவட்டம் காவிரி ஆற்றங்கரையில் கோரைப்பயிர் சாகுபடி: அதிகாரிகள் ஊக்குவிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.