ரமலான் பண்டிகை நிறைவு ஊட்டி வரும் கேரள மாநில சுற்றுலா: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

 

ஊட்டி, ஏப். 2: ரமலான் பண்டிகை முடிந்த நிலையில், கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். அங்கு பண்டிகை விடுமுறை வந்தால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக, கேரள மாநிலத்தில் ஓணம் மற்றும் ரமலான் பண்டிகையின் போது தொடர் விடுமுறை வரும் நிலையில், அவர்கள் ஊட்டியை முற்றுகையிடுவது வழக்கம்.

ரமலான் நோன்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரமலான் பண்டிணை கொண்டாடிய நிலையில், நேற்று முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இ பாஸ் கட்டாயம் என்ற போதிலும், பெரும்பாலான கேரள மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர். இதனால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஏராளமான கேரள மாநில சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

The post ரமலான் பண்டிகை நிறைவு ஊட்டி வரும் கேரள மாநில சுற்றுலா: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: