பந்தலூர், மார்ச் 28: பந்தலூர் அருகே சேரம்பாடியில் வனத்துறை சார்பில் வன விலங்குகள் மனித மோதல், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி வனச்சரகம் சார்பில் வனவிலங்குகள் மனித மோதலை தடுப்பது குறித்தும், வனப்பகுதியில் தீ ஏற்படாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அதியமான் கலைக்குழு சார்பில் ஆட்டம் பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வனவிலங்குகள் பாதுகாப்பு, வனவிலங்குகள் மனித மோதல்கள் ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது, வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து, சேரம்பாடி வனச்சரகம் பகுதிகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் சேரம்பாடி வனச்சரகம் ரேஞ்சர் அய்யனார் மற்றும் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.
The post வன விலங்குகள் மோதல், தீத்தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.