மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் சபலென்கா; ஜெஸிகாவை வீழ்த்தி அசத்தல்

மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, உலக நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலாவை அபாரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலாவுடன் மோதினார். முதல் செட்டில் கடும் போட்டி இருந்தபோதும் கடைசியில் அதனை சபலென்கா வசப்படுத்தினார். 2வது செட்டை எந்தவித சிரமமும் இன்றி சபலென்கா கைப்பற்றினார்.

அதனால், 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அவர் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தாண்டில் அவர் பெறும் 2வது சாம்பியன் பட்டம் இது. அவருக்கு ரூ.9.6 கோடி பரிசுத் தொகையும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த ஜெஸிகாவுக்கு, ரூ. 5.1 கோடி பரிசு கிடைத்தது.

The post மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் சபலென்கா; ஜெஸிகாவை வீழ்த்தி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: