விருதுநகர் காப்பகத்திலிருந்து தப்பிய சிறுமிகள் மீட்பு

விருதுநகர், மார்ச் 30: விருதுநகர் காப்பகத்திலிருந்து தப்பிய 2 சிறுமிகளை மதுரையில் போலீசார் மீட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக மீட்கப்படும் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் அரசு அனுமதி பெற்று, விருதுநகர் பாண்டியன் நகர் காந்தி நகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த காப்பகத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக மீட்கப்பட்ட 7 சிறுமிகள் தங்கி இருந்தனர். அதில், விருதுநகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரும், சிவகாசியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும் தப்பினர். இதுகுறித்து காப்பகத்தின் நிர்வாகிகள் ரூரல் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், தப்பிய சிறுமிகள் இருவரும் மதுரை சென்றது தெரியவந்தது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சிறுமிகள் இருவரையும் போலீசார் மீட்டு மீண்டும் விருதுநகர் அழைத்து வந்தனர்.

The post விருதுநகர் காப்பகத்திலிருந்து தப்பிய சிறுமிகள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: