சொந்த ஊருக்கு சென்று வர மதுரையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

மதுரை: தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு சென்று வர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சனி, ஞாயிறு மற்றும் யுகாதி பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் நபர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் சொந்த ஊருக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் இப்பகுதியில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, குற்றாலம், தென்காசி, ராஜபாளையம் மற்றும் தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் செல்ல சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூட்ட நெரிச்சல் இல்லாமல் தேவைக்கு ஏற்ற நிலையில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றனர். இதேபோல் வரும் ஏப்.1ம் தேதி இரவு முதல் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் திரும்புவதுற்கு ஏற்ற நிலையில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சொந்த ஊருக்கு சென்று வர மதுரையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: