லண்டன்: புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லசுக்கு(76) புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மன்னர் சார்லசுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ சோதனைகளுக்கு பின் அவர் கிளாரன்ஸ் அரண்மனைக்கு திரும்பினார் என பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்தன. இதையொட்டி மன்னரின் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று பக்கிங்காம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.
The post பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.