டெல்லி: டெல்லியில் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் உடன் மீனவர்கள் சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒன்றிய அமைச்சருடன் 15 மீனவர்கள் சந்தித்து, மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்கக் கோரியும், படகுகளை விடுவிக்கக் கோரியும் மனு அளித்துள்ளனர்.