சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 5 ஆண்டு சிறை

*புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுச்சேரி : 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

புதுச்சேரி எம்.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்(58), மீனவர். இவர், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி, தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2021 அக்டோபர் 7ம் தேதி நடந்தது. இது குறித்து சிறுமியின் தாய், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ, கடத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து முனியப்பனை கைது செய்தனர்.

இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை நீதிபதி சுமதி விசாரித்து, குற்றவாளி முனியப்பனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளும், கடத்திய குற்றத்துக்கு 3 ஆண்டுகளும், தாக்குதலுக்கு ஒரு ஆண்டும், கொலை மிரட்டலுக்கு 3 ஆண்டுகளும் மற்றும் ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார்.

The post சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: