இந்த சிறப்பு ரயில் வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 3-வது நாளான சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. வந்துசேரும். இந்த சிறப்பு ரயில் தாதர், கல்யாண், லோனாவாலா, புனே, தவுண்ட், குருத்வாடி, சோலாப்பூர், கலபுர்கி, வாடி, கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்திராலயம் ரோடு, குண்டக்கல், ஆனந்தபூர், தர்மாவரம், எலகங்கா, கிருஷ்ணாராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ஈரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்-4, மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்- 6, முன்பதிவு படுக்கை பெட்டிகள்-4, மற்றும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோடை விடுமுறையையொட்டி மும்பை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்! appeared first on Dinakaran.