திருச்சி, மார்ச் 27: ரங்கம் திருவளர்ச்சோலை அரிகே மது போதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (25). மார்ச் 24ம் தேதி தன் வீட்டின் அரிகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார், அப்போது அங்கு மது போதையில் வந்த 2 பேர் கார்மேகத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த கார்மேகம் ரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (25) மற்றும் ராபர்ட் (48) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
The post வாலிபரை வெட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.