உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு அளவீடு

பள்ளிபாளையம், மார்ச் 27: உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி, பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறை கால்வாய் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை வருவாய்துறையினர் அளவீடு செய்தனர். தமிழகம் முழுவதும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பகுதிகளிலும், நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை வருவாய்துறையினர் அளவீடு செய்து வருகின்றனர். இதன்படி பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மேட்டூர் பொதுப்பணித்துறை கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்துறையினர் அளவீடு செய்தனர்.

குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் உத்தரவின்பேரில் பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீஷ் மற்றும் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை கால்வாய் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ள குடியிருப்புகள் குறித்து கணக்கெடுத்துள்ள அதிகாரிகள், ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்புகின்றனர். அதன்பின்னர் அரசு உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிகிறது.

The post உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு அளவீடு appeared first on Dinakaran.

Related Stories: