வேகத்தடையில் தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்செங்கோடு, மார்ச் 26:திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, உன்னியூர் பெரிய பள்ளிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சக்திவேல் (33). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 22ம்தேதி தனது டூவீலரில் ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்தார். தோக்கவாடி பஸ் நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்ததில் அங்குள்ள வேகத்தடையில் டூவீலர் ஏறி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேகத்தடையில் தவறி விழுந்து வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: