இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்திருந்த நிலையில், மார்ஷ் (72 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார். பின், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். 13வது ஓவரை சந்தித்த பூரன், விஸ்வரூபம் எடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர், 30 பந்தில் 75 (7 சிக்சர், 6 பவுண்டரி) ரன் எடுத்து அவுட்டானார். பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர் முடிவில் லக்னோ, 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்திருந்தது. அதையடுத்து, 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்கத்தில் ஆடிய வீரர்கள் சொதப்பியதால் 113 ரன்னுக்குள் 6 விக்கெட் சரிந்தது. இருப்பினும் அசுதோஷ் சர்மாவும், விப்ரஜ் நிகாமும் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். அதனால் 19.3 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்து டெல்லி அசாத்திய வெற்றி பெற்றது. அசுதோஷ் 31 பந்துகளில் 66 ரன் எடுத்து அவுட் ஆகாமல், அணியை வெற்றி பெறச் செய்தார்.
The post ஐபிஎல் 4வது லீக் போட்டி டெல்லி அசாத்திய வெற்றி: அசுதோஷ் சர்மா விஸ்வரூபம் appeared first on Dinakaran.