ஆம்னி பஸ்சில் கடத்திய தங்கம், அமெரிக்க டாலர் பறிமுதல்

பவானி:தெலங்கானா மாநிலம், ஐதராபாத்திலிருந்து கோவைக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில், தங்கம் கடத்தி செல்லப்படுவதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சித்தோடு போலீசார் ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகரில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ்சில் சோதனையிட்டபோது அதில் கடத்தி வரப்பட்ட, அரை கிலோ எடையுள்ள 5 தங்க பிஸ்கட் மற்றும் ரூ.18 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த புகழ்வாசன் (50) என்பவர் ஐதராபாத்தில் மூவரை ஏமாற்றி, தங்க பிஸ்கட்களை வழிப்பறி செய்து, அதனைக் கோவைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, புகழ்வாசனைக் கைது செய்த போலீசார், தங்க பிஸ்கட், அமெரிக்க டாலர்கள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்த தகவலின் பேரில் தெலங்கானா மாநில போலீசார் சித்தோட்டிற்கு வருகின்றனர்.

The post ஆம்னி பஸ்சில் கடத்திய தங்கம், அமெரிக்க டாலர் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: