இதற்கிடையே, கடந்த 2021ல் அவர் டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார். மருத்துவ காரணங்களை காட்டி ஆண்டிகுவாவில் இருந்து சோக்சி வெளியேறினார். இந்நிலையில், சோக்சி தற்போது பெல்ஜியம் நாட்டில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று தங்கி உள்ளார். இது தற்காலிக குடியுரிமை என்றும், ஒருவேளை பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை சோக்சி பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதனால், சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
The post ரூ.13,850 கோடி வங்கி கடன் மோசடி செய்த மெகுல் சோக்சி பெல்ஜியமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் appeared first on Dinakaran.