தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை சாதாரணமாகக் கருதக் கூடாது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறையால் நமது மாநில தொகுதிகள் குறையும்.மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைவதால் நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறைகிறது. நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைவதை நமது அரசியல் வலிமையை குறைவதாகத்தான் கருத முடியும். பிரதிநிதித்துவம் குறைந்தால் நமக்கு விருப்பமில்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படும். பிரதிநிதித்துவம் குறைந்தால் மாநில நிதிக்காக போராடும் நிலை ஏற்படும். நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள்; மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள்.
விவசாயிகள் ஆதரவின்றி பின்தங்குவார்கள்; நமது கலாச்சாரம், அடையாளம், முன்னேற்றம் ஆபத்தை அடையும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூக நீதி பாதிக்கப்படும். நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் குறைந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. 2 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது; அதை கேட்க அவர்களுக்கு வலிமை இல்லை. மறுவரையறை செய்தால் தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும் என பிரதமரே ஒப்புக்கொண்டார்.
நமது போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்துவோம். ஓரணியில் திரண்டுள்ள கட்சிகளின் குழுவுக்கு நியாயமான தொகுதி மறுசீரமப்புக்கான கூட்டு நடவடிக்கை குழு என பெயரிடுகிறோம். தொகுதி மறுசீரமைப்பின் அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தொகுதிகள் குறைவதை எந்த மாநிலமும் ஒப்புக் கொள்ளக் கூடாது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்படுவது அவசியம். எந்த சூழலிலும் நம் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என உறுதியோடு போராடுவோம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வல்லுநர் குழு அமைக்க பரிந்துரைக்கிறேன்.,”இவ்வாறு பேசினார்.
The post தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நம்முடைய அரசியல் வலிமை குறைப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.