விவசாயிகளுக்கு உதவும் வகையில் “முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்” 1,000 இடங்களில் அமைக்கப்படும். பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5,279 விவசாயிகள் பயனடைவார்கள். இதுவரை 2.68 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.26,724 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2025-26-ம் நிதியாண்டில் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.8, 186 கோடி ஒதுக்கப்படும். இந்தாண்டு ஒரு லட்சம் பசுமை குடில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தளி பகுதியில் நறுமண ரோஜா பூ சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வேளாண் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. 2021-22 முதல் 2023-24 வரை 34.38 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பளவு 151 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருபோக சாகுபடி பரப்பளவு 33.60 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post நடப்பாண்டிலும் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்”, ஒரு லட்சம் பசுமை குடில் அமைக்க திட்டம் :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் appeared first on Dinakaran.