திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!!

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆனது. தேமுதிக வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றது. தேமுதிகவின் 15 ஆண்டு கனவு நிறைவேறியது. திமுக-தேமுதிக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி சட்டமன்ற இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; “திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று (03-03-2026) கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும்; இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த குழுவினரும் கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: