மாஜி எஸ்ஐ கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை இருநாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை கோர்ட் அனுமதி


நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் பிஜிலி நில தகராறில் கடந்த 18ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த டவுன் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தச்சநல்லூரைச் சேர்ந்த கார்த்திக் (32), டவுனை சேர்ந்த அக்பர்ஷா (32) ஆகியோர் கடந்த 18ம் தேதியன்று நெல்லை ஜேஎம் 4வது நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனை தொடர்ந்து நீதிபதி விஜயராஜ்குமார் விசாரணை நடத்தி அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

இதன் பேரில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று டவுன் காவல் நிலைய போலீசார் நெல்லை ஜேஎம் 4வது நீதிமன்றத்தில் நேற்று கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தனர். இதனை விசாரித்த நீதிபதி விஜயராஜ்குமார் போலீஸ் காவலுக்கு 2 நாட்கள் அனுமதி வழங்கினார். மேலும் போலீசார், நாளை மறு நாளான (22ம் தேதி) மாலைக்குள் நெல்லை ஜேஎம்4வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

The post மாஜி எஸ்ஐ கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை இருநாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: