இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்திலிருந்து முல்லைத் தோட்டம்நிலையம் வரை சுமார் 3 கி.மீ. நீளம் கொண்டது, இது பூந்தமல்லி பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ இரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும்.படிப்படியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் வழித்தட சோதனைகளுக்குபுதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிசெய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்த ஆண்டு இறுதியில் பூந்தமல்லி முதல் போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக்அவர்கள், ” மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4-ல் உயர்மட்ட வழித்தடத்தில் நடத்தப்பட்ட முதல் வழித்தட சோதனை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்று கூறினார்.
The post சென்னை பூந்தமல்லி – முல்லைத் தோட்டம் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!! appeared first on Dinakaran.