பெரம்பலூர், மார்ச் 21: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அரும்பாவூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கள்ளப்பட்டி கிராமத்தில், தனிப்படையி னர் நடத்திய சோதனையில் கள்ளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த ராஜி மகன் குமார்(75) என்பவர் தனக்கு சொந்த மான மளிகைக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது.
தொடர்ந்து அரும்பாவூர் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் சிற்றரசன் தலைமையிலான குழுவினர் குமாரை கைது செய்து, அவர்மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடமி ருந்து விமல் பாக்கு (25 பண்டல் – 2.650 kg), V1-பான் மசாலா (28 பண்டல் – 680 கிராம்) ஹான்ஸ் (2 பண்டல் – 600 கிராம்) என மொத்தம் 3.930 கிலோ எடையுள்ள சுமார் ரூ10,300 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறி முதல் செய்தனர். பின்னர் வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல்தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத் திற்கோ தகவல் தெரிவிக் கலாம். தகவல் தெரிவிப்ப வர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கள்ளப்பட்டி கிராமத்தில் 3.930 கிலோ குட்கா வைத்திருந்த மளிகை கடைக்காரர் கைது appeared first on Dinakaran.