ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்களை விடுவிக்க கோரியும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் கடந்த பிப்.20ம் தேதி கைது செய்யப்பட்ட ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 6 மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், 4 மீனவர்விடுதலை செய்தும் படகு ஓட்டுநர்களான ஜான் முத்துக்குமார், ஜான்போஸ்கோ ஆகியோருக்கு தலா 6 மாத சிறை தண்டனை, இலங்கை பணம் தலா ₹40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: