வேலூர், மார்ச் 19: வேலூரில் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் அந்தக் கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய பெண் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த கவுரவ விரிவுரையாளர் வேலூர் எஸ்பி மதிவாணனிடம் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதாவிற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொந்தரவு புகாரில் கல்லூரி துணை முதல்வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது வழக்குபதிவு வேலூரில் பரபரப்பு கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.