திருப்பருத்திக்குன்றம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், தும்பவனம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள், கோரை புற்கள் அதிகளவில் முளைத்து, புதர்மண்டி தூர்ந்த நிலையில் உள்ளது.
மேலும், அப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீரும் இந்த கால்வாயில் விடப்படுவதால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசும் அவல நிலையில் காணப்படுகிறது. அதிகளவில் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் தொற்று நோய் பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு அருகிலேயே அதிகளவில் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post புதர்மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.