சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமலும் நிர்வாக காரணங்களாலும் இன்று 4 விமானங்கள் ரத்து!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமலும் நிர்வாக காரணங்களாலும் இன்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து இன்று காலை 5.35 மணிக்கு சென்னை வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் லண்டன், ஐதராபாத் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிகுள்ளாகினர்.

இதேபோல் காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு காலை 11.10 மணிக்கு வரவேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு போதிய பயணிகள் இல்லாமலும் மற்றும் நிர்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானம் பழுது பார்க்கப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. விமானி உரிய நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறை கண்டுபிடித்ததால் 142 பயணிகள் உயிர் தப்பினர்.

The post சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமலும் நிர்வாக காரணங்களாலும் இன்று 4 விமானங்கள் ரத்து!! appeared first on Dinakaran.

Related Stories: