சென்னை: ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1997ல் வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஓராண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
The post ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!! appeared first on Dinakaran.