சென்னை: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கின் கோரிக்கைக்கும் நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாதி சங்கங்களை பதிவு செய்வது தொடர்பாகவும், பள்ளிகளில் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
The post பள்ளி பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.