புகாரின் அடிப்படையில், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தீட்சிதர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் உத்தரவை மீறி தீட்சிதர் செயல்பட்டுள்ளார்.
தீட்சிதர்கள் மீதான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது என்றார். காவல்துறையின் வாதத்தை ஏற்ற நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
The post சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
