இதைத் தொடர்ந்து கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக கூறி தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு தீட்சிதர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
The post சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது : உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
