குளித்தலை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

 

குளித்தலை, மார்ச் 13: கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோட்டைமேடு, குட்டப்பட்டி, சத்தியமங்கலம், அய்யர்மலை, மேட்டுப்பட்டி வலையப்பட்டி, இனுங்கூர், இரும்புதிபட்டி, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர் பழைய ஜெயங்கொண்டம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், திடீரென நேற்று மதியம் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்தது. இதனால், பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

The post குளித்தலை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை appeared first on Dinakaran.

Related Stories: