ஜெலன்ஸ்கியின் செயலால் எரிச்சலடைந்த டிரம்ப் உக்ரைனுக்கான ராணுவ, நிதி உதவிகளை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவால் உக்ரைனின் ராணுவ பலம் குறைந்து ரஷ்யாவை எதிர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவின் உதவியின்றி ரஷ்யாவை எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தம், ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒத்து கொண்டுள்ளார். இதனிடையே ரஷ்யாவின் 10 இடங்களை குறி வைத்து உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 337 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
அந்த டிரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த பரபரப்பான சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார். இதேபோல் அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் சவுதி அரேபியா சென்றார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம், உக்ரைன் கனிமவளங்களை அமெரிக்காவுக்கு தருவது உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
The post போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.
