அதன் முதற்கட்டமாக நாளை(12ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தல் மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட போராட்டமாக ஏப்ரல் 4ம் தேதி அனைத்து ஊராட்சி செயலாளர்களும் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்தில் பெருந்துறை முறையீடு செய்வது எனவும், மூன்றாம் கட்ட போராட்டமாக ஏப்ரல் 21ம் தேதி முதல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையத்தின் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும், என சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி செயலர்கள் சார்பாக 12ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கம் போராட்ட அறிவிப்பு appeared first on Dinakaran.
