தாய் சாப்பாடு கொடுத்தால் அதை கழிப்பறையில் கொட்டிவிட்டு, வெறும் வெந்நீரை மட்டுமே தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஸ்ரீநந்தாவை தலச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது அனோரெக்சியா நெர்வோசா என்ற நோய் அவரை பாதித்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநந்தாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து பல நாட்கள் சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததால் அவரது உணவுக் குழாயும், இரைப்பையும் சுருங்கியது தான் இவரது மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர்.
The post உடல் பருமனால் அழகு குறைந்து விடும் யூடியூப் பார்த்து சாப்பிடாமல் பட்டினி கிடந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு appeared first on Dinakaran.
