சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் ரயில்கள் மாலை 4.10 மணிவரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேவேளை, தாம்பரம், கோடம்பாக்கம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ, பஸ் நிலையங்களில் அதிகாலை முதலே பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கிண்டி, சென்டிரல் உள்பட அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல், தாம்பரம், கிண்டி, சென்டிரல், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
The post புறநகர் மின்சார ரயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளனர்! appeared first on Dinakaran.
