மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. அந்த போர் விமானத்தில் 2 வீரர்கள் பயணித்தனர். இதையடுத்து மாயமான போர் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில், போர் விமானம் புகிண்ட்னான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 2 வீரர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிலிப்பைன்ஸ் நாட்டில் புகிண்ட்னான் மாகாணத்தில் மலைப்பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்து; 2 வீரர்கள் பலி appeared first on Dinakaran.
