இதனால், திடுக்கிட்டு விழித்த சிறுமி, வெளியில் சென்றிருந்த தனது பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மேலும், 1098 சைல்டு லைனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். இதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று சுதாகரை கைது செய்தனர்.
The post தர்மபுரி அருகே வீடு புகுந்து பள்ளி மாணவியை பலாத்கார முயற்சி: தவெக நிர்வாகி போக்சோவில் கைது appeared first on Dinakaran.
