இந்துமதி கடந்த 2022ல் அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 520 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். டாக்டர் ஆகும் கனவுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் 350 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வு பயிற்சி மேற்கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஓபிசி சான்றிதழ் பதிவு செய்து அதனை நேற்றுமுன்தினம் பெற்றனர்.
இந்நிலையில், வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் இரவு 11 மணி அளவில் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாணவியின் தந்தை ராமதாஸ் கூறுகையில், ‘நீட் தேர்வின் மீதான பயத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்,’ என கூறியபடி கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post திண்டிவனம் அருகே சோகம் நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.
