முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கிற அத்தனை முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். மீண்டும் இந்த மண்ணில் உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அப்போதுதான் பெரியாரின் கருத்தியலை பாதுகாக்க முடியும். அம்பேத்கரின் சிந்தனைகளை பாதுகாக்க முடியும். உழைக்கும் மக்களின் கனவை நனவாக்க முடியும். ஒட்டுமொத்த தேசத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். உங்களோடு எப்போதும் உற்ற துணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
The post மீண்டும் இந்த மண்ணில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.
