6 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஒரு மலை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பிரபு(35) என்பவர் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். இவர் 7ம் வகுப்பு பயிலும் சில மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் நேற்று முன்தினம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார் எண் 1098ஐ அழைத்து தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் வந்து விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியர் மீது 6 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதையடுத்து, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் பிரபுவை நேற்று கைது செய்தனர்.

The post 6 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: