எலிஸ் பெரி 90 ரன்(55 பந்து, 3 சிக்சர், 9 பவுண்டரி) விளாசி களத்தில் இருந்தார். 182 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டுகளை பறிகொடுத்து 180 ரன் எடுத்து போட்டியை சமன் செய்தது. வாரியர் அணியில் அதிகபட்சமாக சோபி 33 ரன் எடுத்தார். பெங்களூரு அணி பந்துவீச்சில், ரானா 3 விக்கெட்டும், ரேனுகா, கிம் தலா 2 விக்கெட்டும், எலிஸ் பெரி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் வாரியர்ஸ் அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன் எடுத்தது. 9 ரன் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 6 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்து அதிர்ச்சியாக தோற்றது. இதனால் வாரியர்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
The post மகளிர் பிரீமியர் லீக் பெங்களூரு அணி தோல்வி appeared first on Dinakaran.
